Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நடுநிலைப்பள்ளிகளில் தாமதமாகும் மின்சார வசதி; ஆய்வகம் அமைக்கும் பணிகள் பாதிப்பு

நடுநிலைப்பள்ளிகளில் தாமதமாகும் மின்சார வசதி; ஆய்வகம் அமைக்கும் பணிகள் பாதிப்பு

நடுநிலைப்பள்ளிகளில் தாமதமாகும் மின்சார வசதி; ஆய்வகம் அமைக்கும் பணிகள் பாதிப்பு

நடுநிலைப்பள்ளிகளில் தாமதமாகும் மின்சார வசதி; ஆய்வகம் அமைக்கும் பணிகள் பாதிப்பு

ADDED : ஜூன் 20, 2025 06:07 AM


Google News
உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதி அரசு நடுநிலைப்பள்ளிகளில், உயர்தர ஆய்வகம் அமைப்பதற்கான மின்சார வசதி வழங்குவதற்கான நடவடிக்கை தாமதமாகிறது.

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்த, தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, அரசு துவக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர கம்ப்யூட்டர் ஆய்வகம் அமைப்பதற்கும் கடந்த 2023-24ம் கல்வியாண்டின் இறுதி முதல் பணிகள் நடக்கிறது.

கடந்தாண்டு இத்திட்டம் செயல்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு கட்டமாக பணிகள் மேற்கொள்ளும் சூழல் காரணமாக, நடப்பாண்டில் செயல்படுத்துவதற்கு பணிகள் தீவிரமாக நடக்கிறது.

அதில் நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர ஆய்வகம் அமைப்பதற்கு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

உடுமலை சுற்றுப்பகுதி அரசு நடுநிலைப்பள்ளிகளில், ஆய்வகம் அமைப்பதற்கான கட்டமைப்பு பணிகள் நடக்கிறது. மேலும் தொழில்நுட்ப குழுவினர் கம்ப்யூட்டர் உபகரணங்கள் பொறுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு நடுநிலைப்பள்ளிகளில் உயர்தர ஆய்வகம் அமைப்பதற்கு, மின்வசதிகளை 'மும்முனை' (3 பேஸ்) ஆக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்திலிருந்து ஒன்றிய நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி ஊராட்சிகளில் அதற்கான பணிகள் நடக்கிறது.

ஆனால் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில், மின் இணைப்பை மாற்றுவதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், பணிகள் அனைத்தும் நிறைவுபெற்ற நிலையிலும் மின் இணைப்பு மாற்றத்துக்கு பள்ளி நிர்வாகத்தினர் காத்திருக்கின்றனர்.

அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், நடுநிலைப்பள்ளிகளில் மின் இணைப்பை மாற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை. கிராம ஊராட்சிகளில் ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் மின் இணைப்பு மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஜூலை 15ம்தேதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவு செய்து, ஆய்வகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மின் இணைப்பு பெறுவதற்கு தாமதமாவதால் ஆய்வகங்கள் முழுமை பெறாமல் உள்ளன.

இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us