Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தனியார் 'பார்' இல்லையாம் ஆர்.டி.ஐ., பதிலால் சர்ச்சை

தனியார் 'பார்' இல்லையாம் ஆர்.டி.ஐ., பதிலால் சர்ச்சை

தனியார் 'பார்' இல்லையாம் ஆர்.டி.ஐ., பதிலால் சர்ச்சை

தனியார் 'பார்' இல்லையாம் ஆர்.டி.ஐ., பதிலால் சர்ச்சை

ADDED : ஜன 04, 2024 12:11 AM


Google News
பல்லடம், : பல்லடம் வட்டார பகுதியில் தனியார் மதுபான 'பார்'களே இல்லை என, ஆர்.டி.ஐ., பதில் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:

பல்லடம் வட்டார பகுதியில் தனியார் பார்களின் எண்ணிக்கை மற்றும் முகவரி, 'பார்'களில், உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படுகிறதா அல்லது பொது மக்களுக்கும் வழங்கப்படுகிறதா, தனியார் பார்களுக்கு, எதன் அடிப்படையில் மதுபானங்கள் வழங்கப்படுகிறது என்ற தகவல்களை கேட்டு ஆர்.டி.ஐ.,-ல் விண்ணப்பித்திருந்தேன்.

இதற்கு, பல்லடம் வட்டார பகுதியில் தனியார் மதுபான பார்கள் எதுவும் இல்லை. தனியார் பார்களில், உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படுகிறது என்ற பதில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பல்லடத்தில், 7 தனியார் மதுபான பார்கள் செயல்பட்டு வருகின்றன. தனியார் பார்களே இல்லை என்று கூறிவிட்டு, உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படுவதாக குழப்பமான பதில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us