Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நின்ற லாரி மீது பஸ் மோதல்; சிறுவன் உள்பட 2 பேர் பலி

நின்ற லாரி மீது பஸ் மோதல்; சிறுவன் உள்பட 2 பேர் பலி

நின்ற லாரி மீது பஸ் மோதல்; சிறுவன் உள்பட 2 பேர் பலி

நின்ற லாரி மீது பஸ் மோதல்; சிறுவன் உள்பட 2 பேர் பலி

ADDED : ஜூன் 07, 2025 09:24 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; வெள்ளகோவில் அருகே ரோட்டோரம் நின்ற லாரி மீது அரசு பஸ் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.

திருச்சியில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சில் 50 பேர் இருந்தனர். பஸ்சை, சசிகுமார், 51, ஓட்டி வந்தார். நள்ளிரவு 12:00 மணியளவில் திருச்சி-- கோவை தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்தபோது, திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே, குருக்கத்தி ரோட்டோரம் சிமென்ட் மூட்டை லோடுடன் நின்றுகொண்டிருந்த லாரி பின்புறம் மோதியது.

இதில், அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சிறுவன் பவின், 6; தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வன், 50, ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.பஸ் நடத்துனர் பாலசுப்பிரமணி, 50; திருச்சியை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி,35; ஜெகதீஷ்,42; தஞ்சையைச் சேர்ந்த வீரம்மாள், 40; அவிநாசியை சேர்ந்த கிரிஷ், 14; முத்துலட்சுமி,40; செல்வி,45; சண்முகம், 45; வள்ளிக்கண்ணு, 46; சேலம் மதிவாணன், 38; வெள்ளகோவில் சுதா, 35 மற்றும் 40 வயது மதிக்கதக்க பெண் என 12 பேர் காயமடைந்தனர்.அவர்கள் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெள்ளகோவில் போலீசார் லாரி டிரைவர் கார்த்திக், 44, மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us