Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அனுஷ மகா ஜெயந்தி விழா; பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை

அனுஷ மகா ஜெயந்தி விழா; பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை

அனுஷ மகா ஜெயந்தி விழா; பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை

அனுஷ மகா ஜெயந்தி விழா; பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை

ADDED : ஜூன் 11, 2025 08:07 PM


Google News
Latest Tamil News
உடுமலை; உடுமலை ஜி.டி.வி., லே-அவுட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் காஞ்சி மகா பெரியவா அனுஷ ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது.

கோவிலில், வைகாசி மாத அனுஷ நட்சத்திர நாளையொட்டி காஞ்சி மகா பெரியவா அனுஷ ஜெயந்தி கோலாகலமாக நடந்தது. மாலையில் விக்னேஸ்வர பூஜையுடன் வழிபாடு துவங்கியது.

தொடர்ந்து, சங்கல்பம், பீட பூஜை, அனுஷ பிரதான பூஜை, சித்ர பீட ஆவாஹனம், குரு தியானம், பூர்ண கும்ப மரியாதை, காஞ்சி மகா பெரியவா அஷ்டோத்திர அர்ச்சனை நடந்தது.

அதன் பின், விநாயகர் அகவல், சிவபுராணம், திருத்தொண்டர் தொகை, கோளறு திருப்பதிகம், பஞ்சபுராணம், திருப்புகழ் உள்ளிட்ட ஸ்லோக பாராயணங்கள், குரு கீதம், நாம சங்கீர்த்தனம், வேதபாராயணம், காஞ்சி மட ஸ்வஸ்த்தி வசனம், சதுர்வேத பாராயணம் நடந்தன.

இறுதியில் தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வழிபாட்டில் உலக அமைதிக்கும், சமாதானத்துக்கும், ஒற்றுமைக்கும் ஆரோக்கியத்துக்கும் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us