Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கூடுதல் ரயில்கள் இயக்கணும்

கூடுதல் ரயில்கள் இயக்கணும்

கூடுதல் ரயில்கள் இயக்கணும்

கூடுதல் ரயில்கள் இயக்கணும்

ADDED : ஜூன் 23, 2025 11:00 PM


Google News
உடுமலை; உடுமலை வழியாக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில், பாலக்காடு - சென்னை, திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - திருச்செந்துார், மதுரை - கோவை உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பல்வேறு நகரங்களைச்சேர்ந்த மக்கள் பல்வேறு பணிகள் நிமித்தமாக உடுமலை வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தற்போது இயக்கப்படும் ரயில்கள் போதுமானதாக இல்லை. இதனால், அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அதிக பணம் செலவழித்து பிற வாகனங்களில் செல்ல வேண்டியதுள்ளது.

எனவே, உடுமலை வழியாக சென்னை, தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us