Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கபடிப்போட்டியில் 80 அணிகள் பங்கேற்பு

கபடிப்போட்டியில் 80 அணிகள் பங்கேற்பு

கபடிப்போட்டியில் 80 அணிகள் பங்கேற்பு

கபடிப்போட்டியில் 80 அணிகள் பங்கேற்பு

ADDED : ஜூன் 22, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
அனுப்பர்பாளையம்: திருப்பூர், அ.தி.மு.க., இளம்பெண்கள் இளைஞர் பாசறை விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பில், மூன்றாம் ஆண்டு தொடர் கபடி போட்டி இரண்டு நாட்கள் வாவிபாளையத்தில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தொடங்கி வைத்து பேசினார்.

எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், பகுதி செயலாளர் நாச்சிமுத்து, கவுன்சிலர் இந்திராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டி 'நாக் அவுட்' முறையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 80 அணிகள் பங்கேற்றன.

போட்டியில், வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாய், மூன்று மற்றும் நான்காம் பரிசாக 8 ஆயிரம் ரூபாய்,மற்றும் கோப்பைஆறுதல் பரிசாக நான்கு அணிகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us