/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முகாமில் 60 பேருக்கு வேலை கிடைத்தது முகாமில் 60 பேருக்கு வேலை கிடைத்தது
முகாமில் 60 பேருக்கு வேலை கிடைத்தது
முகாமில் 60 பேருக்கு வேலை கிடைத்தது
முகாமில் 60 பேருக்கு வேலை கிடைத்தது
ADDED : மே 24, 2025 05:52 AM
திருப்பூர் : திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் துவக்கிவைத்தார். ஆடை உற்பத்தி, மொபைல் ஷாப், நகை கடை, ஜவுளி விற்பனை உட்பட பல்வேறு வகையான, 27 நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். முகாமில், ஆண்கள் 86 பேர், பெண்கள் 106 பேர் என, மொத்தம் 192 வேலை தேடுவோர் பங்கேற்றனர். அவர்களின் கல்விச்சான்று சான்று விவரங்களை சரிபார்த்து, தகுதியானவர்களை, தேர்வு செய்தனர். முகாமில், 26 ஆண், 34 பெண், என, மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.


