இன்றுடன் நிறைவு
திருப்பூர் வடக்கு தாலுகாவில், இரண்டு பிர்காக்களே உள்ளன. இன்று வேலம்பாளையம் பிர்காவோடு, ஜமாபந்தி முடிவடைகிறது. அதேபோல், ஊத்துக்குளி, மடத்துக்குளம் தாலுகாக்களிலும் இரண்டாவது நாளான இன்றோடு நிறைவடைகிறது. திருப்பூர் தெற்கு தாலுகாவில் நாளையும், அவிநாசி, பல்லடம், காங்கயம் தாலுகாக்களில், வரும், 27ம் தேதி, உடுமலையில், 28ம் தேதி, தாராபுரத்தில், வரும் 30ம் தேதியுடன் ஜமாபந்தி முடிவடைகிறது.
தீர்வு காண்பதே மேல்
கலெக்டர் தலைமையில், வாரந்தோறும் திங்கள்கிழமை, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. கடந்த 19ம் தேதி நிலவரப்படி, குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கப்பட்டவற்றில், இன்னும் 2,180 மனுக்கள் நிலுவையில் உள்ளன. அவற்றில், 15 நாட்களுக்கு உட்பட்ட, 1,116 மனுக்கள்; 16 நாட்களுக்கு மேல் 30 நாட்களுக்கு உட்பட்ட 814 மனுக்களும்; ஒரு மாதத்துக்கு மேல் மூன்று மாதத்துக்கு உட்பட்ட 215 மனுக்களும் நிலுவையில் உள்ளன. மூன்று மாதங்களை கடந்த, 13 மனுக்களும்; ஆறு மாதங்களை கடந்தும் தீர்வு காணப்படாமல் 16 மனுக்களும் உள்ளன.