Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தந்தம் - மான் கொம்பு மீட்பு: திருப்பூர் அருகே நான்கு பேர் கைது

தந்தம் - மான் கொம்பு மீட்பு: திருப்பூர் அருகே நான்கு பேர் கைது

தந்தம் - மான் கொம்பு மீட்பு: திருப்பூர் அருகே நான்கு பேர் கைது

தந்தம் - மான் கொம்பு மீட்பு: திருப்பூர் அருகே நான்கு பேர் கைது

ADDED : ஜூலை 06, 2024 08:39 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் சிலர் யானை தந்தம், மான் கொம்பு ஆகியவற்றை கடத்தி விற்பனை செய்ய உள்ளதாக, காங்கேயம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், காங்கேயம் வனச்சரகர் மோனிகா தலைமையிலான குழுவினர் தாராபுரத்தில் கண்காணித்தனர்.

அதில், உடுமலை சாலையில் சந்தேகப்படும் விதமாக நான்கு பேரை பிடித்தனர். விசாரணையில், அலங்கியத்தைச் சேர்ந்த ரமேஷ், 52, பழனி, குதிரையாறு டேமைச் சேர்ந்த சுப்ரமணி, 60, தேனரசன், 35 மற்றும் பாப்பம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ், 50, என தெரிய வந்தது.

இக்கும்பல், இரண்டு யானை தந்தங்களை விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. நான்கு பேரையும் காங்கேயம் வனத்துறையினர் கைது செய்தனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேருக்கும் மீன் பிடிக்கும் வகையில் பழக்கம் ஏற்பட்டது. சமீபத்தில் தேனரசன், குதிரையாறு டேமில் மீன் பிடிக்கும் போது, மீன் வலையில் இரண்டு யானை தந்தங்கள் சிக்கின. இவற்றை விற்க, தன் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அலங்கியத்தில் உள்ள ரமேஷின் வீட்டில் வைத்திருந்துள்ளனர். இரண்டு யானை தந்தங்களை பறிமுதல் செய்த போது, வீட்டில் இரு மான் கொம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us