Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புலிகளை காக்க வேண்டும் மாணவர்கள் விழிப்புணர்வு 

புலிகளை காக்க வேண்டும் மாணவர்கள் விழிப்புணர்வு 

புலிகளை காக்க வேண்டும் மாணவர்கள் விழிப்புணர்வு 

புலிகளை காக்க வேண்டும் மாணவர்கள் விழிப்புணர்வு 

ADDED : ஜூலை 29, 2024 11:16 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில், சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டது. புலிகள் போல் வேடமிட்டு மாணவர்கள் வந்திருந்தனர். கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

வனவர் உமாமகேஸ்வரி பேசுகையில்,''இந்தியாவில், 4 ஆயிரம் புலிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். பேராசைக்காக புலியை கொல்லக்கூடாது, அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்,'' என்றார். புலிகள் போன்று வேடமிட்டு, நடனமாடி, பிரமிடு உருவாக்கி, என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us