ADDED : ஜூன் 23, 2024 01:35 AM

உடுமலை:திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில், தமிழக களரி பயட்டு அசோசியேஷன் சார்பில், 7வது மாநில அளவிலான களரி சாம்பியன் ஷிப், போட்டிகள் நேற்று நடந்தது.
மாநில களரி பயட்டு செயலாளர் வீரமணி, தலைவர் தேவராஜ், தேசிய களரி பயட்டு செயலாளர் பூந்துறைசோமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், சிவகங்கை, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருப்பூர், கோவை, சென்னை, விழுப்புரம், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட களரி பயட்டு பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர்.
சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. சுவடுகள் சீனியர் பிரிவில், உடுமலை அரசு ஆண்கள் கல்லுாரியை சேர்ந்த மாணவர், சேகுவாரா, சப்-ஜூனியர் பிரிவில் சுர்ஜித் முதலிடம் பிடித்தனர்.
உருமி வீசல் பிரிவில் ஸ்வேதா, கெட்டு கரி பிரிவில் ஜீவா, ருத்ரேந்தர் ஆகியோரும், உரிமி வீசல் பிரிவில் முத்துச்செல்வம் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.