Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துனர் கவுரவிப்பு

ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துனர் கவுரவிப்பு

ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துனர் கவுரவிப்பு

ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துனர் கவுரவிப்பு

ADDED : ஜூலை 21, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்:அரசு பஸ்சில், 24 ஆண்டு பணியாற்றி ஓய்வு பெற்ற நடத்துனரை, ஊர் மக்கள் மாலை அணிவித்து கவுர வித்தனர். ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை வழியாக பெருந்துறைக்கு சி-13 டவுன் பஸ் இயக்கப்படுகிறது.

இந்த பஸ் நடத்துனர் தவசியப்பன். கடந்த, 2001 முதல் இவ்வழித்தடத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்றுடன் பணி ஓய்வு பெற்ற இவருக்கு, அக்கரையாம் பாளையம் பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், பயணிகள் இணைந்து பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தினர்.

நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்த நடத்துனருக்கு, அக்கரையாம் பாளையம் பஸ் ஸ்டாப்பில் ஆரத்தி எடுத்து வரவேற்று, மாலை அணிவித்து, பழங்கள் மற்றும் இனிப்பு வழங்கினர்; சக பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

சிறப்பாக பணியாற்றிய தவசியப்பனுக்கு, அங்கிருந்து அனைவரும் கைதட்டி வழியனுப்பி வைத்தனர். ஊர்மக்களின் இந்நிகச்சியால், அரசு பஸ் டிரைவர், நடத்துனர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us