/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ துாய்மைப்பணி சுணக்கம் நகராட்சி கவுன்சிலர்கள் புகார் துாய்மைப்பணி சுணக்கம் நகராட்சி கவுன்சிலர்கள் புகார்
துாய்மைப்பணி சுணக்கம் நகராட்சி கவுன்சிலர்கள் புகார்
துாய்மைப்பணி சுணக்கம் நகராட்சி கவுன்சிலர்கள் புகார்
துாய்மைப்பணி சுணக்கம் நகராட்சி கவுன்சிலர்கள் புகார்
ADDED : ஜூலை 21, 2024 12:31 AM
திருப்பூர்;காங்கயம் நகராட்சி மன்ற கூட்டம், நகராட்சி தலைவர் சூரிய பிரகாஷ் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் கனிராஜ், துணைத் தலைவர் கமலவேணி முன்னிலை வைத்தனர்.
இதில் குடிநீர் குழாய்கள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்; ரோடுகள் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து மொத்தம் 87 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதியில் சேகரமாகும் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் பெரும் சுணக்கம் நிலவுகிறது.
துாய்மைப்பணியாளர்கள் மிகவும் மெத்தனமாக பணியாற்றுகின்றனர்; அலுவலர்கள் உரிய கண்காணிப்பு மேற்கொண்டும், தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளது.
தெரு நாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இப்பிரச்னைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் தெரிவித்தார்.