Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூலை 17, 2024 08:39 PM


Google News
உடுமலை : உடுமலை நகரில் பிரதான ரோடுகளில் ஒன்றாக ராஜேந்திரா ரோடு உள்ளது. இந்த ரோட்டில், நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா, முக்கிய வணிக கடைகள், ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளன.

இதனால், இந்த ரோடு எப்பொழுதும் போக்குவரத்து அதிகம் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால், இந்த ரோட்டில் தள்ளுவண்டிகள் நிறுத்தப்படுவதும், கடைகளின் ஆக்கிரமிப்புகளும் வாகன ஓட்டுநர்களுக்கு தீராத பிரச்னையாக இருந்து வருகிறது.

குறிப்பாக, திங்கட்கிழமைகளில் சந்தை கூடுகிறது. அன்று ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவ்வப்போது சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. பொதுமக்களும் ரோட்டில் நடக்க முடியாமல் திணற வேண்டியதுள்ளது.

எனவே, இந்த ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us