Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மழை நீர் வடிகால் வசதி இருந்தும் பயனில்லை; அதிகாரிகள் அலட்சியத்தால் ரோட்டில் தேங்கும் அவலம்

மழை நீர் வடிகால் வசதி இருந்தும் பயனில்லை; அதிகாரிகள் அலட்சியத்தால் ரோட்டில் தேங்கும் அவலம்

மழை நீர் வடிகால் வசதி இருந்தும் பயனில்லை; அதிகாரிகள் அலட்சியத்தால் ரோட்டில் தேங்கும் அவலம்

மழை நீர் வடிகால் வசதி இருந்தும் பயனில்லை; அதிகாரிகள் அலட்சியத்தால் ரோட்டில் தேங்கும் அவலம்

ADDED : ஜூலை 17, 2024 08:40 PM


Google News
Latest Tamil News
உடுமலை : உடுமலையில், சிறிய மழைக்கே, ரோடுகளில் மழை நீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மழை நீர் வடிகால்கள் இருந்தும், அதிகாரிகள் அலட்சியம் காரணமாக வீணாகியுள்ளது.

உடுமலை பகுதிகளில், சிறிய அளவிலான மழை பெய்த நிலையில், மழை நீர் வெளியேற வழியின்றி, ரோடுகளின் மத்தியில் தேங்கி, போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ரோடுகளும் குண்டும், குழியுமாக மாறி, விபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது.

உடுமலை - தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, பழநி ரோடு பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், பெரிய அளவில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டன.

ஆனால், பெய்யும் மழை நீர் அனைத்தும், வடிகால்களுக்கு செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தாமல், ரோட்டை விட உயரமாகவும், உரிய ஓட்டைகள் இன்றி, பெயரளவிற்கு அமைக்கப்பட்டதால், ரோட்டிலேயே குளம் போல் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

அதே போல், நகராட்சி சார்பில், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ள ரோட்டில், புதிதாக மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது.

ஆனால், பெய்யும் நீர், வடிகால் வழியாக வெளியேறும் கட்டமைப்பு அமைக்காமல், திட்ட குளறுபடி காரணமாக, கழிவு நீருடன், மழை நீரும் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறது.

மேலும், வணிக வளாகம், கடை உரிமையாளர்கள் மழை நீர் வடிகாலை ஆக்கிரமித்தும், அடைத்தும் வழித்தடம், கடை அமைத்துள்ளதால், பயனில்லாமல் உள்ளது.

அதே போல், கல்பனா ரோடு, பசுபதி வீதி, வ.உ.சி., வீதி என நகர பகுதியிலுள்ள ரோடுகளில், மழை வெள்ள நீர் வடிய வழியில்லை.

மழை வெள்ளம் எளிதாக வடியும் வகையில், இயற்கையாக, தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம் என ஓடைகள் அமைந்துள்ள நிலையில், நகருக்குள் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகால்கள் இந்த ஓடைகளில் இணைக்கப்படாமல் உள்ளது.

இதனால் கல்பனா ரோடு சந்திப்பு, மாரியம்மன் கோவில் சந்திப்பு, பைபாஸ் ரோடு சந்திப்பு, திருப்பூர் ரோடு சந்திப்பு என அனைத்து பகுதிகளிலும் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, ஆக்கிரமிப்புகளால் பல இடங்களில், மூடப்பட்டுள்ளது.

இதனால், மழை வெள்ள நீர் வடிய வழியின்றி, ரோடுகளில் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், வாகன போக்குவரத்து பாதிப்பதோடு, ரோடுகளும் சேதமடைந்து வருகின்றன.

பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல், கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, நகர பகுதியிலுள்ள மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புளை அகற்றி, துார்வாரவும், புதிதாக அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால்களுக்கு எளிதாக நீர் செல்லும் வகையில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us