/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உயிர்வாழ் சான்று தபால் துறை அறிவிப்பு உயிர்வாழ் சான்று தபால் துறை அறிவிப்பு
உயிர்வாழ் சான்று தபால் துறை அறிவிப்பு
உயிர்வாழ் சான்று தபால் துறை அறிவிப்பு
உயிர்வாழ் சான்று தபால் துறை அறிவிப்பு
ADDED : ஜூலை 20, 2024 11:09 PM
திருப்பூர்;திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் அறிக்கை:
மத்திய, மாநில அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்க, ஓய்வூதியதாரர் படும் சிரமத்தை தவிர்க்கும் விதமாக, தபால் துறையின் கீழ் செயல்படும் 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தியும், முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல்எண், பி.பி.ஓ., எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்பிக்க முடியும். இதற்கு சேவை கட்டணம், 70 ரூபாய்; தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியம் மற்றும் குடும்பம் ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பித்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்