Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பஸ் ஸ்டாண்டில் வசதிகள் இன்றி பயணியர் அவதி

பஸ் ஸ்டாண்டில் வசதிகள் இன்றி பயணியர் அவதி

பஸ் ஸ்டாண்டில் வசதிகள் இன்றி பயணியர் அவதி

பஸ் ஸ்டாண்டில் வசதிகள் இன்றி பயணியர் அவதி

ADDED : ஜூன் 12, 2024 12:18 AM


Google News
உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதிகள் இல்லாததால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான வெளியூர், டவுன்பஸ்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணியர் பல்வேறு நகரங்களுக்கு செல்ல இங்கு வருகின்றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பஸ் ஸ்டாண்டில், போதிய இருக்கைகள் இல்லாமல் உள்ளது. மேலும், அங்குள்ள கடைகளின் கழிவுநீர், குப்பை நிறைந்து காணப்படுகிறது.

இதனால், அங்கு வருவோர் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, பஸ் ஸ்டாண்டில், கூடுதலாக இருக்கை வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உடுமலை நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us