/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கட்டடம் அல்ல... கருணையின் கொடை புற்றுநோய் சிகிச்சை மையம் அடுத்தாண்டு முதல் செயல்பாடு கட்டடம் அல்ல... கருணையின் கொடை புற்றுநோய் சிகிச்சை மையம் அடுத்தாண்டு முதல் செயல்பாடு
கட்டடம் அல்ல... கருணையின் கொடை புற்றுநோய் சிகிச்சை மையம் அடுத்தாண்டு முதல் செயல்பாடு
கட்டடம் அல்ல... கருணையின் கொடை புற்றுநோய் சிகிச்சை மையம் அடுத்தாண்டு முதல் செயல்பாடு
கட்டடம் அல்ல... கருணையின் கொடை புற்றுநோய் சிகிச்சை மையம் அடுத்தாண்டு முதல் செயல்பாடு

நவீன வசதிகள்
இந்திய அளவில் சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக இது அமைகிறது. கதிர்வீச்சு புற்று நோயியல் பிரிவு, உள் கதிர்வீச்சு மருத்துவம், மருத்துவ புற்று நோயியல் பிரிவு, அறுவை சிகிச்சை புற்று நோயியல் பிரிவு, அணு மருத்துவம், முழு உடல் பெட் சிடி ஸ்கேன், இருதய மருத்துவ கேத் லேப் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த மையம் அமைய உள்ளது. அதிநவீன கதிர்வீச்சு வழங்கும் கருவி, ரோபோடிக் சர்ஜரி உள்ளிட்ட அனைத்து வகை கருவிகளும் இடம்பெற உள்ளன. இதற்கான இயந்திரங்கள் அமெரிக்காவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
முழுவீச்சு
சிகிச்சை மையம் கட்டும் பணி சுறுசுறுப்பாகியுள்ளது. அறுபது கோடி ரூபாய் மதிப்பிலான புற்றுநோய் மையத்துக்கு, கருத்துரு தயாரிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்டங்களாக நிதி திரட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து பலரும் நிதி வழங்கி வருகின்றனர். முதல்கட்ட பணிகளை துவங்குவதற்காக, மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த ஜன., 10ம் தேதி நடந்தது.