Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொட்டு பார்த்தால் காகிதம்: தொடர்ந்து படித்தால் ஆயுதம்!

தொட்டு பார்த்தால் காகிதம்: தொடர்ந்து படித்தால் ஆயுதம்!

தொட்டு பார்த்தால் காகிதம்: தொடர்ந்து படித்தால் ஆயுதம்!

தொட்டு பார்த்தால் காகிதம்: தொடர்ந்து படித்தால் ஆயுதம்!

ADDED : ஜூலை 28, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
'புத்தக வாசிப்பு வாயிலாக அந்தஸ்து பெற முடியும்' என, அப்துல் கலாம் நினைவு நாளில் தெரிவிக்கப்பட்டது.திருப்பூர், காந்திநகர், ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் டயானா, வரவேற்றார்.

அப்துல் கலாம் குறித்து, மாணவி பூஜா ஸ்ரீ பேசினார். ஏ.வி.பி., டிரஸ்ட் கல்விக்குழும தலைவர் கார்த்திகேயன், தலைமை வகித்தார். தொடர்ந்து, ஏ.வி.பி., டிரஸ்ட் கல்விக்குழுமம் சார்பில், 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்புக்கு, 5.91 லட்சம் ரூபாய் நன்கொடைக்கான காசோலை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.எஸ்.,) மூத்த விஞ்ஞானி டில்லிபாபு,'' புத்தகங்களை நிறைய படிக்க வேண்டும். தொட்டு பார்த்தால் வெறும் காகிதம் தான்; தொடர்ந்து படித்தால், அதுதுான் ஆயுதம். அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் புத்தகத்தை படித்த பிறகு தான் எனக்கு ராணுவ விஞ்ஞானியாக மாற வேண்டும் என்ற உத்வேகம் வந்தது. நமது மூளை பிறரின் வலியை போக்குவதாக இருக்க வேண்டும் அப்துல் கலாமின் அறிவுரையை மனதில் கொள்ள வேண்டும்,'' என்றார்.முடிவில், பள்ளி ஒருங்கிணைப்பாளர் வித்யாரிஸ்வான், நன்றி கூறினார்.

-------------

திருப்பூரில், காந்தி நகர், ஏ.வி.பி., பள்ளியில் நடந்த அப்துல் கலாம் நினைவு தின கருத்தரங்கில், 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்புக்கு, ஏ.வி.பி., கல்வி குழுமம் சார்பில், 5.90 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.

'ஒரத்துப்பாளையம் சரணலாயம்'

விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாள் கிளாஸிக் போலோ சிவராம் பேசியதாவது:ஒவ்வொருவரும் பிறருக்கு உதவ வேண்டும் என, அப்துல் கலாம் விரும்பினர். பசுமையை போற்றினார். வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் சார்பில், மரக்கன்று நட்டு வளர்த்து வருகிறோம். சாய கழிவுநீரால் சூழப்பட்டிருந்த ஒரத்துப்பாளையம் குளத்தில், பொதுப்பணித்துறை அனுமதியுடன் காலியாக உள்ள இடங்களில், இந்தாண்டு, 2.50 லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளோம்; அடுத்த, 5 ஆண்டுகளில், 5 லட்சம் மரக்கன்று நட திட்டமிட்டுள்ளோம். ஒரத்துப்பாளையம் சரணாலயம் என்ற பெயரில் இப்பணிக்கான பூமி பூஜை, அடுத்த மாதம், 4ம் தேதி, கலெக்டர் கிறிஸ்துராஜ், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் நடக்க இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us