Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருப்பூர் வேல் கார்டன்ஸில் வீட்டுமனை விற்பனை துவக்கம்

திருப்பூர் வேல் கார்டன்ஸில் வீட்டுமனை விற்பனை துவக்கம்

திருப்பூர் வேல் கார்டன்ஸில் வீட்டுமனை விற்பனை துவக்கம்

திருப்பூர் வேல் கார்டன்ஸில் வீட்டுமனை விற்பனை துவக்கம்

ADDED : ஜூன் 11, 2024 12:37 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்;திருப்பூர் - காங்கயம் ரோடு, விஜயாபுரம், காளிபாளையம் பிரிவு சந்திப்பு பி.வி.பி., பள்ளி அருகில் வேல் கார்டன்ஸின் டி.டி.சி.பி., அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வீட்டுமனை விற்பனை நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது. முதல் விற்பனையை வேல் கார்டன்ஸ் பங்குதாரர்கள் கொங்கு முருகேசன், ஜெயசித்ரா சண்முகம், துரைசாமி, கந்தசாமி, நடராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். விஜயாபுரத்தை சேர்ந்த முத்துராஜ் வீட்டுமனையின் முதல் விற்பனையை பெற்று கொண்டார்.

வேல் கார்டன்ஸ் பங்குதாரர்கள் கூறியதாவது: வேல் கார்டன்ஸில், மொத்தம், 39 வீட்டுமனைகள் உள்ளன. ஒருமனை, 4 சென்ட், தார் ரோடு, வடிகால், எல் அண்ட் டி குடிநீர், சோலார், 'சிசிடிவி' கேமரா, பஸ் வசதி, தனித்தனி உட்பிரிவு செய்யப்பட்ட மனைகள், பள்ளி மற்றும் குடியிருப்புகளுக்கு மிக அருகில் அனைத்து வசதிகளுடன் அமைந்துள்ளது.

வாஸ்து முறைப்படி பிரிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அம்சங்களுடன் பூங்கா உள்ளது. இயற்கையான சூழலில் குடியிருப்புகள் மத்தியில், மனதுக்கு நிறைவான அனைத்து சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மனைகள் மிககுறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் விபரங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள், விஜயாபுரத்தில் உள்ள சைட் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 98946 - 66767, 90033 - 31000 என்ற எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us