ADDED : ஜூன் 12, 2024 10:36 PM

பொங்கலுார் : கொடுவாய் பகுதியில் குப்பை மேலாண்மையை சரிவர கையாள்வதில்லை. ஆங்காங்கே குப்பை குவியல் குவியலாக கொட்டி வைக்கப்படுகிறது. அவற்றை ஊராட்சி நிர்வாகம் தீ வைத்து எரிக்கிறது.
அதிலிருந்து கிளம்பும் நச்சுப்புகை அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எனவே, குப்பையை மொத்தமாக சேகரித்து, தரம் பிரித்து அதனை முறையாக அகற்ற வேண்டுமென, பொதுமக்களின் எதிர்பார்க்கின்றனர்.