ADDED : ஜூன் 12, 2024 10:34 PM
திருப்பூர் : நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில், அலங்கியம் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். ஆணையத்திடம் வழங்கினால், வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்தவேண்டி வரும்.
நெடுஞ்சாலைத்துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.