திருப்பூர்:குற்றவியல் சட்ட நடைமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்ததை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் முகமது ஜாபர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் பேசினர். இதில், பங்கேற்றவர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் துணை தலைவர் முஷாபிர் அகமது நன்றி கூறினார்.