Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குற்றவியல் சட்ட திருத்தம் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

குற்றவியல் சட்ட திருத்தம் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

குற்றவியல் சட்ட திருத்தம் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

குற்றவியல் சட்ட திருத்தம் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 02, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
திருப்பூர், ஜூலை 2-குற்றவியல் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் நேற்று வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வரும், 8ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பும் நடக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் கோர்ட் புறக்கணிப்பு நடத்தினர். மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்புறம் நேற்று காலை அனைத்து வக்கீல் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது.

அதன்பின் வக்கீல் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது. இதில், வரும் 8 ம் தேதி வரை கோர்ட் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் புறக்கணிப்பது; சம்மேளனம் சார்பில் அழைப்பு விடுக்கப்படும் போராட்டங்களில் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

'கோர்ட்' இயங்கியது

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையிலும் கோர்ட் பணிகள் வழக்கம் போல் நடந்தது. நீதிபதிகள், அரசு வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றினர். நேற்று விசாரணைக்கு வந்த வழக்குகள் வேறு தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டன.

---

திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன், வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us