Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 10ம் வகுப்பு துணைத்தேர்வு இன்று துவங்குகிறது

10ம் வகுப்பு துணைத்தேர்வு இன்று துவங்குகிறது

10ம் வகுப்பு துணைத்தேர்வு இன்று துவங்குகிறது

10ம் வகுப்பு துணைத்தேர்வு இன்று துவங்குகிறது

ADDED : ஜூலை 02, 2024 12:25 AM


Google News
திருப்பூர்:பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று துவங்கி வரும், 8ம் தேதி வரை நடக்கிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், மே, 10ம் தேதி வெளியானது. மாவட்டத்தில் தேர்வெழுதிய, 30 ஆயிரத்து, 180 பேரில், 27 ஆயிரத்து 879 பேர் தேர்ச்சி பெற்றனர்; 2,301 பேர் தேர்ச்சி பெறவில்லை. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்த தேர்வுத்துறை மே இரண்டாவது வாரம் அறிவிப்பு வெளியிட்டது; மே, 16 முதல் பலரும் விண்ணப்பித்தனர்.

துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று துவங்கி வரும் 8 ம் தேதி வரை துணைத்தேர்வு நடக்கவுள்ளது. மாவட்டத்தில் உள்ள, 11 மையங்களில் தேர்வு நடக்கிறது; மொத்தம், 3,244 பேர் தேர்வெழுத உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியில், பத்து இடங்கள் பின்தங்கிய திருப்பூர், 21வது இடம் பெற்றது.

' முந்தைய ஆண்டை விட அதிகளவில் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெறவில்லை. இதனால், துணைத்தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை நடப்பாண்டு அதிகரித்துள்ளது. அதற்கேற்ற தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது,' என மாவட்ட தேர்வுகள் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us