ADDED : ஜூலை 09, 2024 11:01 PM
திருப்பூர்:ஊதியூர், கருக்கம்பாளையம் காலனியை சேர்ந்தவர் அருண்குமார், 25.
இவருக்கு, எட்டு மாதத்துக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில், குழந்தை பால் குடித்ததில், மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது என்று தெரிவித்தனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.