ADDED : ஜூலை 31, 2024 02:30 AM
உடுமலை;உடுமலை பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் முதல், நேற்று காலை வரை, நல்லாறு பகுதியில், 50 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. உடுமலையில் -- 6.20, வரதராஜபுரம் - 14, பெதப்பம்பட்டி - 10, பூலாங்கிணர் - 9, திருமூர்த்தி நகர் - 18; மடத்துக்குளத்தில் - 3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
அமராவதி அணை பகுதியில் - 8, திருமூர்த்தி அணைப்பகுதியில், 15 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.