ADDED : ஜூன் 02, 2024 01:34 AM
அனுப்பர்பாளையம்:திருப்பூர், பாண்டியன் நகரில் வேலுமணி என்பவர் குடியிருப்புக்கான கட்டடம் கட்ட மாநகராட்சியில் அனுமதி பெற்றார்.
ஆனால் வணிக பயன்பாட்டிற்கான கட்டடம் கட்டியதாகவும், மாநகராட்சி விதிகளின்படி போதிய இடைவெளி விடாமல் கட்டடம் உள்ளதாகவும் அப்பகுதியை சேர்ந்த குப்புராஜ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கட்டடத்திற்கு 'சீல்' வைக்க திருப்பூர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. கட்டடத்தை அதன் உரிமையாளர் வேலுமணி, பனியன் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டிருந்தார். வேலுமணிக்கு வழங்கிய காலக்கெடு முடிந்த நிலையில், கட்டடத்திற்கு 'சீல்' வைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
நேற்றுமுன்தினம் மாநகராட்சி, வருவாய்த்துறை மற்றும் உள்ளுர் திட்ட குழுமத்துறை அதிகாரிகள் கட்டடத்தில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வைத்துவிட்டு, கட்டடத்தை பூட்டி சீல் வைத்தனர்.