ADDED : ஜூன் 03, 2024 01:10 AM
திருப்பூர்;நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை வாரந்தோறும் நடக்கிறது.
நேற்று நடந்த சந்தையில், சினை மாடுகள், கன்று மாடுகள், கிடாரி கன்றுகள், காளை கன்றுகள் மற்றும் பூச்சி காளைகள் என, மொத்தம், 61 கால்நடைகள் வந்தன. காங்கயம் இன மாடுகள் 25 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரையும்; பசுங்கன்றுகள் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையும்; காளை கன்றுகள் 10 ஆயிரம் முதல், 45 ஆயிரம் ரூபாய் வரையும் விற்றது. 31 கால்நடைகள், 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.