/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைதுபாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
பாலியல் தொல்லை போக்சோவில் வாலிபர் கைது
ADDED : மே 21, 2025 02:21 AM
ஜோலார்பேட்டை, திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்னவெங்காயப்பள்ளி, குறும்பர்வட்டத்தை சேர்ந்தவர் கோபால், 28, விவசாயி.
இவருக்கு திருமணமாகி, மகன், மகள் உள்ளனர். இவர், 17 வயது சிறுமியிடம் மொபைல்போனில் அவரை காதலிப்பதாக பேசி வந்தார். இதில், அதிர்ச்சியடைந்த சிறுமி, மொபைல்போனில் கோபாலிடம் பேசுவதை தவிர்த்தார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் தனியாக சென்ற அச்சிறுமிக்கு, கோபால் பாலியல் தொல்லை கொடுத்தார். பெற்றோர் புகார் படி, ஜோலார்பேட்டை போலீசார், கோபாலை போக்சோவில் கைது செய்தனர்.