Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/பைக் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி

பைக் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி

பைக் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி

பைக் மீது அரசு பஸ் மோதல்; 2 பேர் பலி

ADDED : ஜன 05, 2024 12:01 AM


Google News
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், முல்லை நிம்மியம்பட்டையை சேர்ந்தவர்கள் பிரவீன், 27, அருள்குமார், 24. நண்பர்களான இருவரும், திருப்பத்துாரில் யோகா பயிற்சி பெற்று வந்தனர்.

நேற்று காலை, 8:00 மணிக்கு, 'பஜாஜ்' பைக்கில், யோகா பயிற்சி மையத்திற்கு காவாப்பட்டறை கிராமம் அருகே சென்றனர்.

அப்போது, ஆலங்காயத்திலிருந்து எதிரே வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில், இருவரும், பஸ்சின் முன் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியாகினர். குரிசிலாப்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us