Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பத்தூர்/ ரயிலில் சிறுமிக்கு தொல்லை

ரயிலில் சிறுமிக்கு தொல்லை

ரயிலில் சிறுமிக்கு தொல்லை

ரயிலில் சிறுமிக்கு தொல்லை

ADDED : மே 14, 2025 01:36 AM


Google News
Latest Tamil News
ஜோலார்பேட்டை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி தங்கள், 9 வயது மகளுடன், ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள கோவிலுக்கு இரு நாட்களுக்கு முன் சென்றனர். தரிசனம் முடிந்து நேற்று முன்தினம் இரவு, காச்சிகுடாவில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பினர்.

நள்ளிரவில், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே, ஓடும் ரயிலில் துாங்கிக்கொண்டிருந்த சிறுமியிடம், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், பலமனேரியை சேர்ந்த குமார், 30, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டார். குமாரை, பயணியர் உதைத்து, டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர்.

ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், குமாரை போக்சோவில் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us