/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ அமைச்சர் சொத்து வழக்கு 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு அமைச்சர் சொத்து வழக்கு 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் சொத்து வழக்கு 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் சொத்து வழக்கு 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் சொத்து வழக்கு 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 24, 2024 10:36 PM
துாத்துக்குடி:தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன், இவர், 2001 முதல், 2006 வரை அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக,4. 90 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக, 2006ல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை துாத்துக்குடி மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி அய்யப்பன் முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் மகன்கள் ஆனந்த பத்மநாதன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன், அவரது தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தன் நேரில் ஆஜராகினர். அமைச்சரும், அவரது மனைவியும் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் 108 சாட்சிகள் அரசு தரப்பான லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களில், விருதுநகர் மாவட்டத்தில் ஆதி திராவிட நலத்துறை அலுவலராக பணிபுரிந்து வருபவரும், வழக்குப் பதிவின்போது துாத்துக்குடியில் துணை தாசில்தாரராக இருந்த சுரேஷ், வி.ஏ.ஓ.,வாக இருந்த மைதிலி ஆகியோரிடம் அமைச்சர் தரப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர்கள் நேற்று விசாரணை செய்தனர்.
தொடர்ந்து, வழக்கின் விசாரணையை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி அய்யப்பன் உத்தரவு பிறப்பித்தார்.