Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ தோட்ட தொழிலாளி வெட்டிக்கொலை

தோட்ட தொழிலாளி வெட்டிக்கொலை

தோட்ட தொழிலாளி வெட்டிக்கொலை

தோட்ட தொழிலாளி வெட்டிக்கொலை

ADDED : ஜூலை 10, 2024 02:23 AM


Google News
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே தோட்டத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே நட்டாத்தியில் ஜான்பால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

இதில் கோட்டைக்காடு கிராமத்தைச்சேர்ந்த சந்திரசேகர் 58, என்பவர் தொழிலாளியாக பணியாற்றினார். தினமும் காலை 9:00 மணிக்கு வேலைக்கு வருபவர், மாலை 6:00 மணிக்கு கிளம்பி செல்வார்.

நேற்று மாலை 5:30 மணிக்கு தோட்டத்தில் அவரை ஒருவர் பார்க்க சென்றபோது தோட்ட அறையில் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

சாயர்புரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து சாயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us