Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ திருச்செந்துார் கடலில் குளித்த பக்தர் மரணம்

திருச்செந்துார் கடலில் குளித்த பக்தர் மரணம்

திருச்செந்துார் கடலில் குளித்த பக்தர் மரணம்

திருச்செந்துார் கடலில் குளித்த பக்தர் மரணம்

ADDED : ஜூலை 26, 2024 12:45 AM


Google News
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடினர். அவர்களில், திருப்பூர் மாவட்டம், நைனம்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி, 65, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர்.

கரையில் இருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் இருந்த அவரை கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் மீட்டு ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருச்செந்துார் மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பழனிசாமி உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us