/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ சரக்கு வாகனம் மோதி சி.ஆர்.பி.எப்., வீரர் பலி சரக்கு வாகனம் மோதி சி.ஆர்.பி.எப்., வீரர் பலி
சரக்கு வாகனம் மோதி சி.ஆர்.பி.எப்., வீரர் பலி
சரக்கு வாகனம் மோதி சி.ஆர்.பி.எப்., வீரர் பலி
சரக்கு வாகனம் மோதி சி.ஆர்.பி.எப்., வீரர் பலி
ADDED : ஜூன் 23, 2024 09:28 AM

துாத்துக்குடி : கயத்தாறு அருகே நான்கு வழிச்சாலையில் சரக்கு வாகன மோதி சி.ஆர்.பி.எப்., வீரர் பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே சித்தார் சத்திரத்தை சேர்ந்தவர் நாராயணசாமி 31. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றினார்.
விடுமுறையில் சொந்த ஊர் வந்தார். நேற்று முன்தினம் மாலை திருநெல்வேலி -மதுரை நான்கு வழிச்சாலையில் கயத்தாறு அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சரக்கு வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமுற்றவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
கயத்தாறு போலீசார் விசாரித்தனர். நாராயணசாமிக்கு மனைவி மணிமேகலை மகன்கள் அபிமேனி 8, அபிநந்தன் 6, உள்ளனர்.