Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அசாம் சிறுமி தமிழகம் கடத்தல் திருவள்ளூரில் வாலிபர் கைது

அசாம் சிறுமி தமிழகம் கடத்தல் திருவள்ளூரில் வாலிபர் கைது

அசாம் சிறுமி தமிழகம் கடத்தல் திருவள்ளூரில் வாலிபர் கைது

அசாம் சிறுமி தமிழகம் கடத்தல் திருவள்ளூரில் வாலிபர் கைது

ADDED : ஜூன் 02, 2025 03:35 AM


Google News
திருவள்ளூர்:அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தைச் சேர்ந்த ரஹீம்பக்ஸ் மகன் அஜிஜூல் பக்ஸ் பப்லு, 23. இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். இருவரும், வீட்டை விட்டு வெளியேறினர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், அசாம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

சிறுமியின் மொபைல் போன் வைத்து ஆராய்ந்ததில், தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அசாம் போலீசார் நேற்று, மப்பேடு போலீசார் உதவியுடன், சிறுமி, அஜிஜூல் பக்ஸ் பப்லுவை மீட்டனர்.

மீட்கப்பட்ட சிறுமியை, பெரியகுப்பத்தில் உள்ள அரசு காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

அஜிஜூல் பக்ஸ் பப்லு, இப்பகுதியில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்ததாகவும், அவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், மப்பேடு போலீசார் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us