ADDED : ஜூன் 13, 2025 02:45 AM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதி சேர்ந்தவர் திரிபுரசுந்தரி, 59. இவர் கடந்த, 9ம் தேதி திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து மூலவரை தரிசனம் செய்தார்.
பின் மலைப்பாதையில் நடந்து வந்துக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த தண்ணீர் டிராக்டர், மோதியதில் திரிபுரசுந்தரி படுகாயம் அடைந்தார். இவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.