Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ லட்சுமிபுரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படுமா?

லட்சுமிபுரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படுமா?

லட்சுமிபுரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படுமா?

லட்சுமிபுரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படுமா?

ADDED : செப் 20, 2025 09:46 PM


Google News
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில் உள்ள லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில், அகற்றப்பட்ட நிழற்குடையை மீண்டும் அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கவரைப்பேட்டை - சத்தியவேடு நெடுஞ்சாலையில், ஐயர்கண்டிகை கிராமம் அருகே லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது.

ஏ.என்.குப்பம், ஆர்.என்.கண்டிகை, லட்சுமிபுரம் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் இப்பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த இடத்தில், பயணியரின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்க பணிக்காக, நிழற்குடையை மாநில நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். சாலை விரிவாக்க பணி முடிந்து ஓராண்டு கடந்த நிலையில், இதுவரை நிழற்குடை அமைக்கப்படவில்லை.

எனவே, லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில், உடனடியாக நிழற்குடை அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us