Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வரும் 26ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

வரும் 26ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

வரும் 26ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

வரும் 26ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ADDED : செப் 20, 2025 09:46 PM


Google News
திருவள்ளூர்:திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வரும், 26ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும், 26ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, மின்வாரியம் மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

எனவே, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து, அதற்கு தீர்வு கண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us