Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சுகாதார வளாகத்தை சீரமைச்சாச்சு! திறப்பு விழா எப்போது ஆபீசர்ஸ்?

சுகாதார வளாகத்தை சீரமைச்சாச்சு! திறப்பு விழா எப்போது ஆபீசர்ஸ்?

சுகாதார வளாகத்தை சீரமைச்சாச்சு! திறப்பு விழா எப்போது ஆபீசர்ஸ்?

சுகாதார வளாகத்தை சீரமைச்சாச்சு! திறப்பு விழா எப்போது ஆபீசர்ஸ்?

ADDED : செப் 06, 2025 11:50 PM


Google News
திருவாலங்காடு:மணவூர் ஊராட்சியில், பாழடைந்த மகளிர் சுகாதார வளாகத்தை, ஊரக வளர்ச்சித் துறை மூலம் சீரமைத்து, ஒன்பது மாதங்களான நிலையில், தற்போது வரை திறக்கப்படாததால், மீண்டும் சேதமடையும் நிலை உருவாகி வருவதாக, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில், பழையனுார் சாலையில், 2014ல் பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், 10 ஆண்டுகளாக பயன்பாடின்றி பாழடைந்தது. இந்நிலையில், 2023--- - 24ம் ஆண்டு துாய்மை பாரத திட்டத்தில், 6.50 லட்சம் ரூபாயில், கடந்த நவம்பர் மாதம் சீரமைக்கப்பட்டது.

ஆனால், பயன்பாட்டிற்கு வராமல் ஒன்பது மாதமாக மீண்டும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மகளிர் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வராததால் பெண்கள், குழந்தைகள் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பது தொடர்வதாகவும், இதனால், பெண்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

எனவே, மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us