Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று பவித்ர உத்சவம் துவக்கம்

வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று பவித்ர உத்சவம் துவக்கம்

வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று பவித்ர உத்சவம் துவக்கம்

வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று பவித்ர உத்சவம் துவக்கம்

ADDED : செப் 06, 2025 11:50 PM


Google News
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், பவித்ர உத்சவம் இன்று துவங்கி, வரும் 13ம் தேதி வரை ஏழு நாட்கள் நடக்கிறது.

தினமும் நடைபெறும் பூஜைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை நிவர்த்தி செய்வதற்காக இந்த உத்சவம் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, தினமும் காலை சதுஸ்தான அர்ச்சனம், சாத்துமறை நடக்கிறது. மாலை பெருமாள் மாடவீதி புறப்பாடும், இரவு சதுஸ்தான அர்ச்சனம், ஹோமம், சாத்துமறை நடைபெறும்.

மேலும், கோவில் வளாகத்தில் காலை 9:30 - 11:00 மணி வரையும், இரவு 7:00 - 8:30 மணி வரையும் யாகசாலை பூஜை நடைபெறும். உற்சவர் வைத்திய வீரராகவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெறும்.

இந்த ஏழு நாட்களும், உற்சவர் வீரராகவ பெருமாள், மாலை 5:30 மணிக்கு மாடவீதிகளில் உலா வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us