Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டி

பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியருக்கு பேச்சு போட்டி

ADDED : செப் 19, 2025 10:02 PM


Google News
திருவள்ளூர்:தமிழ் வளர்ச்சி துறை சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு பேச்சு போட்டி நடத்தப்பட உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், அண்ணாதுரை மற்றும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, வரும், 29 மற்றும் 30ம் தேதிகளில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான பேச்சு போட்டி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும். போட்டிகளில் முதல் மூன்று இடம் பெறுவோருக்கு, 5,000, 3,000 மற்றும் 2,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்கள் தலா இருவருக்கு, 2,000 ரூபாய் சிறப்பு பரிசு வழங்கப்படும்.

பள்ளி தலைமையாசிரியர் மற்றும் கல்லுாரி முதல்வர்கள், போட்டியில் பங்கேற்க உள்ள மாணவர்களை தேர்வு செய்து, adtdtrl@gmail.com என்ற மெயிலில், வரும், 26ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us