/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அடிப்படை வசதி இல்லாத சுடுகாடு அதிகத்துார் பகுதிவாசிகள் அவதிஅடிப்படை வசதி இல்லாத சுடுகாடு அதிகத்துார் பகுதிவாசிகள் அவதி
அடிப்படை வசதி இல்லாத சுடுகாடு அதிகத்துார் பகுதிவாசிகள் அவதி
அடிப்படை வசதி இல்லாத சுடுகாடு அதிகத்துார் பகுதிவாசிகள் அவதி
அடிப்படை வசதி இல்லாத சுடுகாடு அதிகத்துார் பகுதிவாசிகள் அவதி
ADDED : ஜன 25, 2024 11:00 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்சேரி ஊராட்சி. இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்காக ஏரி அருகே உள்ள சுடுகாடை அதிகத்துார் காலனி பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சுடுகாடு போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டிக் கிடக்கிறது சுடுகாடு பகுதியில் சாலை, தண்ணீர், மின்சாரம் போன்ற எவ்வித அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சுவர் இல்லை. இதனால் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் சுடுகாடு பகுதியை சீரமைத்து தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகத்துார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


