/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருத்தணியில் குளம் போல் தேங்கிய மழைநீர்...தத்தளிப்பு!:யார் காரணம் என துறைகள் இடையே மோதல்திருத்தணியில் குளம் போல் தேங்கிய மழைநீர்...தத்தளிப்பு!:யார் காரணம் என துறைகள் இடையே மோதல்
திருத்தணியில் குளம் போல் தேங்கிய மழைநீர்...தத்தளிப்பு!:யார் காரணம் என துறைகள் இடையே மோதல்
திருத்தணியில் குளம் போல் தேங்கிய மழைநீர்...தத்தளிப்பு!:யார் காரணம் என துறைகள் இடையே மோதல்
திருத்தணியில் குளம் போல் தேங்கிய மழைநீர்...தத்தளிப்பு!:யார் காரணம் என துறைகள் இடையே மோதல்

அவதி
பெரும்பாலான மக்கள் ரயில் நிலையம், அரசு மற்றும் தனியார் வங்கிகள், எம்.எல்.ஏ., அலுவலகம், தலைமை தபால் நிலையம் ஆகிய இடங்களுக்கு ம.பொ.சி. சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். மழைநீர் தேங்கி நிற்பதால், ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணியர் கடும் அவதிப்படுகின்றனர்.
மாற்று ஏற்பாடு
மேலும், ரயில்வே நிர்வாகம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே, கால்வாயில் மழைநீர், கழிவுநீர் விடக்கூடாது என, எச்சரித்து நகராட்சி நிர்வாகத்திடம் கடிதம் வழங்கியுள்ளது.
ரூ.1.87 கோடியில் மழைநீர் வடிகால்வாய்
ம.பொ.சி.சாலையில் தேங்கும் மழைநீரை நிரந்தரமாக வெளியேற்றுவதற்கு, 750 மீட்டர் நீளத்திற்கு, புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்ட மதிப்பீடு, 1.87 கோடி ரூபாய் தேவை என தயார் செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கும், உயர் அதிகாரிகளுக்கும் பரிந்துரை செய்துள்ளோம். நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் பழைய சிண்டிகேட்வங்கியில் இருந்து, எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே உள்ள ஆலமரம் தெரு பகுதி வரை, மழைநீர் வடிகால்வாய் அமைத்து தண்ணீர் வெளியேற்றப்படும். இக்கால்வாய் பணிகள் முடிந்தால் எவ்வளவு மழை பெய்தாலும் ம.பொ.சி.சாலையில் தண்ணீர் தேங்கி நிற்காது.