Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணம் வழங்கல்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணம் வழங்கல்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணம் வழங்கல்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கல்வி உபகரணம் வழங்கல்

ADDED : செப் 02, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்ட அங்கன்வாடி குழந்தைகளுக்கு, கல்வி உபகரணம் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில், 1,757 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களில், 6 மாதம் முதல் 2 வயது வரை, 36,269 குழந்தைகள், முன்பருவக் கல்வி மற்றும் மதிய உணவு 38,755 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உபகரணம் மற்றும் ஆரோக்கிய நொறுக்கு தீனி வழங்கும் திட்டம், துவக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 15 அங்கன்வாடி குழந்தைகளுக்கு, கல்வி உபகரணங்கள் மற்றும் ஆரோக்கிய நொறுக்கு தீனியை கலெக்டர் பிரதாப், வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட பிறபடுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ராணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us