ADDED : ஜூன் 02, 2025 11:17 PM

மீஞ்சூர், மீஞ்சூர் ஒன்றியம் வஞ்சிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆசானபூதுார் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டி சேதமடைந்துள்ளது.
மேலும், துாண்களில் விரிசல்கள் ஏற்பட்டும், கான்கிரீட் பூச்சுக்கள் உதிர்ந்தும் பலவீனமாக உள்ளது.
இதனால், குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதால், பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.