/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இனி புது வரி... 526 ஊராட்சிகளில் வீடுகள் தரம் பிரித்து நிர்ணயம்:ஒரு மாதத்திற்குள் கணக்கெடுப்பு முடிக்க உத்தரவு இனி புது வரி... 526 ஊராட்சிகளில் வீடுகள் தரம் பிரித்து நிர்ணயம்:ஒரு மாதத்திற்குள் கணக்கெடுப்பு முடிக்க உத்தரவு
இனி புது வரி... 526 ஊராட்சிகளில் வீடுகள் தரம் பிரித்து நிர்ணயம்:ஒரு மாதத்திற்குள் கணக்கெடுப்பு முடிக்க உத்தரவு
இனி புது வரி... 526 ஊராட்சிகளில் வீடுகள் தரம் பிரித்து நிர்ணயம்:ஒரு மாதத்திற்குள் கணக்கெடுப்பு முடிக்க உத்தரவு
இனி புது வரி... 526 ஊராட்சிகளில் வீடுகள் தரம் பிரித்து நிர்ணயம்:ஒரு மாதத்திற்குள் கணக்கெடுப்பு முடிக்க உத்தரவு
வரி வசூலிப்பு
இந்த நடைமுறையில் பெரும்பாலான ஊராட்சிகளில் வீடுகளுக்கு வரி வசூலிக்காமல், ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வந்தன. கடந்தாண்டு முதல் அனைத்து ஊராட்சிகளின் வருவாயை உயர்த்தவும், அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு தேவையான நிதியுதவி பெறுவதற்கும், அனைத்து வீடுகளுக்கும் கட்டாயம் வரி நிர்ணயம் செய்து, 'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்றம் செய்து, ஊராட்சி செயலர்கள் வரி வசூலித்து வந்தனர்.
கணக்கெடுப்பு
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் புதிய வரி நிர்ணயம் செய்வதற்கு ஊராட்சி செயலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், நேற்று முன்தினம் முதல் ஊராட்சிகளில் உள்ள வீடுகள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.
உத்தரவு
மேலும், அந்தந்த ஊராட்சி நிர்வாகம், குடிசை வீடு, ஓட்டு வீடு, தளம் வீடு என, தரம்பிரித்து, 1 சதுரடிக்கு குறிப்பட்ட தொகையை நிர்ணயம் செய்து, ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என, ஒன்றிய அதிகாரிகள் வாயிலாக ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளோம்.