Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/சாலையில் குப்பை எரிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் குப்பை எரிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் குப்பை எரிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் குப்பை எரிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

ADDED : பிப் 05, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
திருப்பாச்சூர்: திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது புதிய திருப்பாச்சூர்.

இந்த நெடுஞ்சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பஸ், கனரக வாகனம் என 3,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையோரம் விடையூர் செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் சேகரமாகியுள்ள குப்பையை துாய்மை பணியாளர்கள் அகற்றாமல் தீ வைத்து வருகின்றனர்.

இதனால் ஏற்பட்ட புகையால் இந்த நெடுஞ்சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us