ஹரியானா காங்., பெண் எம்.எல்.ஏ. , இன்று பா.ஜ.,வில் ஐக்கியம்
ஹரியானா காங்., பெண் எம்.எல்.ஏ. , இன்று பா.ஜ.,வில் ஐக்கியம்
ஹரியானா காங்., பெண் எம்.எல்.ஏ. , இன்று பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : ஜூன் 19, 2024 12:46 AM

குர்கான்: ஹரியானா காங்., பெண் எம்.எல்.ஏ., கிரண் சவுத்ரி, அக்கட்சியிலிருந்து விலகி பா.ஜ.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானாவின் தோஷாஹாம் தொகுதி காங்., பெண் எம்.எல்.ஏ.. கிரண் சவுத்ரி, 68 இவரது மகள் சுருதிசவுத்ரி. இருவரும் காங்.,கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்தனர்.
இன்று இருவரும் டில்லி சென்று பா.ஜ. மூத்த தலைவர்களை சந்தித்து அவர்கள் முன்னிலையில் பா.ஜ.வில் ஐக்கியமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தன் மகள் சுருதிசவுத்ரிக்கு காங்., மேலிடம் எம்.பி.,சீட் தரவில்லை. ஆனால் முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா ஆதரவாளருக்கு சீட் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிருப்தியடைந்த கிரண் சவுத்ரி, தன் மகளுடன் இன்று பா.ஜ.வில் ஐக்கியமாக உள்ளார்.
ஹரியானா சட்டசபைக்கு இந்தாண்டு அக்டோபரில் தேர்தல் நடக்கிறது. இந்த சூழ்நிலையில் இருவரும் கட்சியிலிருந்து விலகியது ஹரியானா காங். , கிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.